தண்ணீர் வராது… கண்ணீர் தான்…
” தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைக் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி. ” . மூன்றாம் உலகப்போர் என்றொன்று வருமேயானால் அது நீருக்கும் சோற்றுக்கும் தான் என்ற வாக்கியத்தைத் தமிழக மக்களுக்கு அடிக்கடி நினைவு படுத்துவது நதிநீர் பிரச்சனைதான். ஏற்கனவே தீப்பிழம்பாய் எரிந்து தீர்வின்றி முடிந்த காவிரி பிரச்சனை ஒருபுறமிருக்க, போராடித் தீர்த்த மேகதாட்டு பிரச்சனை மறுபுறமிருக்க, அடுத்த பிரச்சனையாய் தலைதூக்கியுள்ளது தென்பெண்ணை விவகாரம். வேந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல வடதமிழகத்தின் நீர் பாசனத்திற்குப் பெரிதும் உதவும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைக் கட்ட உச்சநீதிமன்ற அனுமதியளித்துள்ளது. 50 மீட்டர் உயரத்தில் அணை கர்நாடக மாநிலம் சிக்கப்பல்லாபூர் மாவட்டத்தின் நந்தி மலையில் உற்பத்தியாகும் நீரானது கொடியாளம் பகுதியில் தமிழகத்தைத் தொட்டு தென்பெண்ணை நதியாக நுழைகிறது. கொடியாளம் ...